For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சங்கரன்கோவிலில் மர்மநபர்களின் வருகை அதிகரித்துள்ளது: பாஜக, இந்து முன்னணி, இந்து துறவியர் பேரவை

Google Oneindia Tamil News

சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் மர்ம நபர்களின் வருகை அதிகரித்துள்ளதாக பாஜக, இந்து முன்னணி மற்றும் இந்து துறவியர் பேரவை ஆகியவை தெரிவித்துள்ளன.

இது குறித்து பாஜக, இந்து முன்னணி மற்றும் இந்து துறவியர் பேரவை கூட்டம் சார்பில் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சங்கரன்கோவிலில் அம்பாள் கோயில் ஊர்வலத்தின் போது திட்டமிட்டு கலவரம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கலவரத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் போலீசார் அவர்களை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

சங்கரன்கோவிலில் இந்து சமுதாய மக்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். கோயில் ஊர்வலம் நடந்த போது போதிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படவில்லை. சமீப காலமாக சங்கரன்கோவிலில் மர்மநபர்களின் வருகை அதிகரித்துள்ளது. எனவே, உளவுத்துறை போலீசார் அதை கண்காணிக்க வேண்டும்.

திட்டமிட்டு கலவரத்தை நடத்தியவர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.

English summary
BJP, Hindu Munnani party and Hindu Thuraviyar Peravai have told that many unknown persons are coming to Sankarankovil recently. Attack against Hindus have been increasing here, they added.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X