For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக-கேரள எல்லையில் நக்சல்கள் ரகசிய கூட்டம்: ராணுவம் திடுக் தகவல் !

Google Oneindia Tamil News

T N Kerla Border
கொல்லம்: தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள அச்சன்கோவில் வனப்பகுதியில் நக்சலைட்டுகள் கடந்த மாதம் ரகசிய கூட்டம் நடத்தியுள்ளனர்.

தமிழ்நாடு, கேரளாவில் ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதிகளில் மாவோ நக்சலைட்கள் ரகசிய கூட்டம் நடத்துவதாகவும், ஆயுதப் பயிற்சியில் ஈடுபடுவதாகவும் ராணுவ உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது பற்றி இரு மாநில அரசுகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுதது வனப்பகுதியில் தமிழக, கேரள போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

ஆனால் அதையும் மீறி தமிழக, கேரள எல்லையில் உள்ள அச்சன்கோவில் வனப்பகுதியில் நக்சலைட்கள் ரகசிய கூட்டம் நடத்தியதாக ராணுவ உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. உடனே ராணுவம் மற்றும் போலீஸ் நுண்ணறிவு துறையினர் அச்சன்கோவில் பகுதிக்கு சென்று விசாரணை நடத்தியதில் ரகசிய கூட்டம் நடத்தியது உண்மை என உறுதியாகி இருக்கிறது.

கடந்த மாதம் 21, 22ம் தேதிகளில் இக்கூட்டம் நடந்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த நக்சலைட் தலைவரான சேதுராமன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் 50 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் கேரளாவைட் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இதையடுத்து தமிழக கியூ பிரிவு மற்றும் நுண்ணறிவு துறை போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

English summary
Naxals from Kerala and TN gathered met in the forest area in the border. Police have confirmed this and are investigating. TN based naxal leader Sethuraman headed the meeting held on januray 21 and 22.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X