For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சங்கரன்கேவிலில் புதிய தமிழகம் போட்டியிடுமா? கிருஷ்ணசாமி ஆலோசனை

Google Oneindia Tamil News

சங்கரன்கோவில்: சங்கரன்கேவில் இடைத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடுவது குறித்து அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி ஆலோசனை நடத்தி வருகின்றார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி அங்கம் வகித்தது. ஆனால் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டதால் கூட்டணி உடைந்து நொருங்கியது.

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடப்போவதாக அதிமுக அறிவித்தது. அதன்படியே வேட்பாளராக முத்துச்செல்வியை அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. 26 அமைச்சர்கள் அடங்கிய 34 பேர் கொண்ட தேர்தல் பணிககுழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சங்கரன்கோவில் தொகுதியில் புதிய தமிழகம் கட்சிக்கு என வலுவான வாக்கு வங்கி உள்ளதால் அங்கு போட்டியிடுவது குறித்து அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே களத்தில் அதிமுக, திமுக, மதிமுக என வலுவான கட்சிகள் இருக்கும் நிலையில் புதிய தமிழகம் போட்டியிடும் பட்சத்தில் போட்டி கடுமையாக இருக்கும் என கூறப்படுகின்றது.

English summary
Puthiya Tamilagam chief Dr. Krishnasamy is discussing with the party functionaries about contesting in the Sankarankovil bypoll. Already ADMK, DMK and MDMK are there in the race.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X