பரிசளிப்பு விழாவின்போது பிரியங்கா கணவர் ராபர்ட் வதேரா திடீரென மயங்கி விழுந்தார்
குர்கான்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா, குர்கானில் நடந்த பரிசளிப்பு நிகழ்ச்சியின்போது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
குர்கானில் உள்ள ஒரு கோல்ப் கிளப்பி்ல நடந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டார் ராபர்ட். அப்போது பரிசுகளை அவர் வழங்கிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவர் திடீரென மயங்கி விழுந்து விட்டார். உடனடியாக அருகில் இருந்த அவரது பாதுகாவலர்கள், ராபர்ட்டை தாங்கிப் பிடித்துக் கொண்டனர். பின்னர் அவர் கோல்ப் நிறுவன வாகனத்தில் மேதாந்தா மெடிசிட்டி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
சமீபத்தில் உ.பி. சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின்போது ராகுல் காந்திக்குத் துணையாக ராபர்ட்டும், அவரது மனைவி பிரியங்காவும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.