For Daily Alerts
Just In
தியாகி கோதையம்மாள் காலமானார்
சுதந்திரப் போராட்ட வரலாற்றில் நீங்கா இடம்பெற்றுள்ள வாஞ்சிநாதனின் நண்பரும் நெல்லை சதி வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவருமான தியாகி அழகப்பிள்ளையின் மனைவி கோதையம்மாள். தமது கணவரைப் போல இவரும் சுதந்திரப் போராட்டக் களத்தில் சிறை தண்டனை பெற்றவர்.
இவருக்கு தனது 85 வயதில் தான் அரசு பென்சன் வழங்கியது. தள்ளாடும் வயதிலும், அதிகாலையில் எழுந்து தனது அன்றாட பணிகளை தாமே செய்து வந்த தியாகி கோதையம்மாள் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு வீட்டில் படுத்த படுக்கையானார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை அவர் காலமானார். அதனை தொடர்ந்து செங்கோட்டை தாசில்தார் தங்கவேலு, வருவாய் ஆய்வாளர் அமகது, விஏஓ முருகேசன், மற்றும் பொதுமக்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
Comments
English summary
Freedom fighter Kothaiyammaal passed away on Wednesday morning at her Sengkottai residence. She was 90.
Story first published: Thursday, March 15, 2012, 12:02 [IST]