For Daily Alerts
Just In
கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை பெட்ரோல் குண்டு வீசி வெறித் தாக்குதல்
ராமேஸ்வரம்: சேனல் 4 நிறுவனம் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான புதிய வீடியோவை வெளியிட்ட நேரத்தில், இந்திய நாடாளுமன்றத்தில் இலங்கைக்கு எதிராக தமிழக எம்.பிக்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நேரத்தில், கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்களை பெட்ரோல் குண்டு வீசித் தாக்கியுள்ளது இலங்கை கடற்படை.
ஆறுமுகம் என்பவருக்குச் சொந்தமான படகு மற்றும் வேறு சில படகுகளில் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்றனர். அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது கடும் தாக்குதலில் இறங்கினர். சரமாரியாக பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் ஆறுமுகத்தின் படகு சேதமடைந்தது.
மேலும் அதில் இருந்த நான்கு மீனவர்கள் படுகாயமடைந்தனர். இதையடுத்து சக மீனவர்களின் படகுகளில் ஏறி அவர்கள் உயிர் தப்பி கரைக்கு வந்து சேர்ந்தனர்.
Comments
English summary
Lankan navymen have hurled Petrol bombs on TN Fishermen near Kachatheevu.
Story first published: Thursday, March 15, 2012, 10:12 [IST]