For Daily Alerts
Just In
ஏப். 5, 6ல் வங்கிகளுக்கு விடுமுறை- ஏடிஎம்களில் பணப் பற்றாக்குறை வரலாம்!
ஏப்ரல் 5 ம் தேதி வியாழக்கிழமை அன்று மகாவீர் ஜெயந்தி நாள் என்பதால் விடுமுறை அளிக்கப்பட்டுகின்றது. அதே போல, மறு நாள் வெள்ளிக்கிழமை புனிதவெள்ளி என்பதால் அன்றும் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், 5 மற்றும் 6 ம் தேதிகளில் வங்கி பணிகள், பணப்பரிமாற்றம் உள்ளிட்ட சேவைகள் நடைபெறாது.
ஆனால், ஏ.டி.எம். மூலம் நடைபெறும் பணப்பட்டுவாடாவில் தடங்கல் ஏதும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இரண்டு நாள் தொடர் விடுமுறை என்பதால் ஏடிஎம்களில் பணப் பற்றாக்குறை வர வாய்ப்புள்ளதாக வாடிக்கையாளர்கள் அச்சப்படுகின்றனர்.
7 ம் தேதி சனிக்கிழமை வழக்கம் போல் அனைத்து வங்கிகளும் செயல்படும். ஆனால் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்று விடுமுறையாகும்.
Comments
English summary
Banks will be remain closed on April 5 and 6 due to Good friday and Mahaveer Jayanthi.
Story first published: Tuesday, April 3, 2012, 16:32 [IST]