For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏப். 5, 6ல் வங்கிகளுக்கு விடுமுறை- ஏடிஎம்களில் பணப் பற்றாக்குறை வரலாம்!

Google Oneindia Tamil News

Bank
மதுரை: வரும் ஏப்ரல் 5 மற்றும் 6 ம் தேதிகளில் நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வங்கிகளின் ஏடிஎம் மையங்களில் பணப் பற்றாக்குறை வருமா என்ற அச்சம் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

ஏப்ரல் 5 ம் தேதி வியாழக்கிழமை அன்று மகாவீர் ஜெயந்தி நாள் என்பதால் விடுமுறை அளிக்கப்பட்டுகின்றது. அதே போல, மறு நாள் வெள்ளிக்கிழமை புனிதவெள்ளி என்பதால் அன்றும் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், 5 மற்றும் 6 ம் தேதிகளில் வங்கி பணிகள், பணப்பரிமாற்றம் உள்ளிட்ட சேவைகள் நடைபெறாது.

ஆனால், ஏ.டி.எம். மூலம் நடைபெறும் பணப்பட்டுவாடாவில் தடங்கல் ஏதும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இரண்டு நாள் தொடர் விடுமுறை என்பதால் ஏடிஎம்களில் பணப் பற்றாக்குறை வர வாய்ப்புள்ளதாக வாடிக்கையாளர்கள் அச்சப்படுகின்றனர்.

7 ம் தேதி சனிக்கிழமை வழக்கம் போல் அனைத்து வங்கிகளும் செயல்படும். ஆனால் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்று விடுமுறையாகும்.

English summary
Banks will be remain closed on April 5 and 6 due to Good friday and Mahaveer Jayanthi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X