மாடுகள் விஷம் வைத்து கொலை-இரு கிராமங்களிடையே மோதல் அபாயம்
நாங்குநேரி: நாங்குநேரி அருகே மஞ்சன்குளத்தில் மாடுகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதால் இரு கிராமங்களிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
மஞ்சன்குளத்தில் மாடு வளர்ப்பவர்கள், அதை இளையநேரி காட்டுபகுதியில் மேய விடுவது வழக்கம். இதுபோல் மேய்ச்சலுககு சென்ற நல்லக்கண்ணு, சங்கரம்மாள், லட்சுமி ஆகியோரது பசு மாடுகள் அங்கு இறந்து கிடந்தன. இதையறிந்த உரிமையாளர்கள் அங்கு சென்று பார்த்தபோது மாடுகள் விஷம் வைத்து சாகடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
மாடுகள் இறந்து போனதற்கு பெரும்பத்தை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது மஞ்சன்குளத்து மக்களின் கருத்து. இதையடுத்து அந்த ஊர் கிராம மக்கள் ஒன்று திரண்டதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் போலீசார் அங்கு விரைந்து சென்று மஞ்சன்குளத்து பொதுமக்களை சமாதானம் செய்தனர்.