For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேகேஎஸ்எஸ்ஆர் ஜாமீனில் விடுதலை - கருணாநிதியுடன் சந்திப்பு

By Shankar
Google Oneindia Tamil News

KKSSR Ramachandran
விருதுநகர்: கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் இன்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

சிறையிலிருந்து வெளியில் வந்த அவர் கட்சியின் தலைவர் கருணாநிதியைச் சந்தித்து ஆசி பெற்றார்.

விருதுநகர் மாவட்டம் சேதுராஜபுரத்தைச் சேர்ந்த தபால் அதிகாரி கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கடந்த 10-ந்தேதி கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் முறையாக விசாரணை நடத்தாத போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜனும் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராமநாதன், முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். தினமும் இருக்கன்குடி போலீசில் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில இன்று காலை சாத்தூர் ராமச்சந்திரன் மதுரை மத்திய சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். விடுதலையாகி வெளியே வந்த சாத்தூர் ராமச்சந்திரனுக்கு ஏராளமான தி.மு.க. வினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

பின்னர் அவர் நேராக சென்னைக்கு வந்து திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து ஆசி பெற்றார்.

English summary
DMK former minister KKSSR Ramachandiran has released in bail today and met his leader Karunanidhi at Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X