For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாஸ்காம் அமைப்பின் புதிய தலைவராக டி.சி.எஸ். சந்திரசேகரன் நாளை பொறுப்பேற்கிறார்

By Mathi
Google Oneindia Tamil News

Nasscom
டெல்லி: இந்திய மென்பொருள் நிறுவன அமைப்புகளின் கூட்டமைப்பான நாஸ்காமின் தலைவராக டி.சி.எஸ். நிறுவனத்தின் தலைவர் என். சந்திரசேகரன் நாளை பொறுப்பேற்க உள்ளார்.

என்.ஐ.ஐ.டி.யின் நிறுவனரான தற்போதைய தலைவர் ராஜேந்திர பவாரின் பதவிக் காலம் முடிவடைகிறது. இதனால் துணைத் தலைவராக உள்ள சந்திரசேகரன் 2012-2013ம் ஆண்டுக்கான தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தகவல் தொழில்நுட்பத்துறையும் அவுட்சோர்சிங் துறையும் மிகுந்த சவால்களை எதிர்கொண்டிருக்கும் தருணத்தில் சந்திரசேகரன் பதவியேற்க உள்ளார். குறிப்பாக இந்தியாவுக்கு அவுட்சோர்சிங் கொடுப்பதற்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு நிலவி வரும் நிலையில் அவரது பணி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

இதற்கான முறையான அறிவிப்பு நாளை மாலை வெளியாக உள்ளது.

English summary
TCS chief, Mr N. Chandrasekaran, will assume the office of Chairman of Nasscom tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X