For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆட்சியர் பொறுப்பிலிருந்து அலெக்ஸ்பால் மேனன் விடுவிப்பு-விடுப்பில் செல்கிறார்

By Mathi
Google Oneindia Tamil News

Alex Paul Menon
சுக்மா: மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட ஆட்சியர் அலெக்ஸ்பால் மேனன் சுக்மா மாவட்டத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அவரது பொறுப்பை தாண்டேவா மாவட்ட ஆட்சித் தலைவர் தற்காலிகமாக வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவோயிஸ்டுகளின் பிடியில் 13 நாட்கள் இருந்த அலெக்ஸ்பால் மேனன் நேற்று விடுவிக்கப்பட்டார். இன்று காலை அவர் சுக்மாவில் உள்ள அவரது வீட்டுக்கு வந்தார்.

இந்நிலையில் அவர் சுக்மா மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் இருந்து விடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அவருக்குப் பதிலாக தண்டேவடா ஆட்சியர் செளத்ரி பொறுப்பேற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அலெக்ஸ் பால் மேனன் விடுமுறையில் செல்லவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இருப்பினும் சில ஊடகங்கள் சத்தீஸ்கர் முதல்வர் ரமண்சிங்கை மேற்கோள்காட்டிஅலெக்ஸ் பால் மேனன் தொடர்ந்தும் சுக்மா மாவட்ட ஆட்சியராக நீடிப்பார் என்று கூறுகின்றன.

English summary
IAS officer Alex Paul Menon, who was on Thursday released by the Naxals after 12-day captivity, was on Friday relieved as the District Collector of Sukma. The District Collector of Dantewada, O P Chaudhary, has been made the in-charge of the district for the time being.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X