For Daily Alerts
Just In
தேவையில்லாம ஏன் தலையிடுறீங்க?.. ஜெயேந்திரருக்கு மதுரை ஆதீனம் கண்டிப்பு!
மதுரை: மதுரை ஆதீன விவகாரத்தில் ஜெயேந்திரர் தலையிடக் கூடாது. இது அவருக்குத் தேவையில்லாத ஒன்று என்று மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.
நித்தியானந்தாவுடன் இணைந்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் மதுரை ஆதீனம். அப்போது அவர் கூறுகையில், புதிய ஆதீனத்தை நியமிப்பது என்னுடைய உரிமை; இதை யாரும் விமர்சிக்க முடியாது. இது குறித்த ஜெயேந்திரரின் கருத்துக்கள் கண்டிக்கத்தக்கது
காஞ்சி சங்கராச்சாரியார் மதுரை ஆதீன விவகாரத்தில் தலையிடக்கூடாது. அவர் கூறிய கருத்துக்கள் அவருக்கு தேவையில்லாத ஒன்று. இதனை கடுமையாக எதிர்க்கிறோம். அவரது கருத்துக்கள் சைவ சமயத்திற்கு நல்லதில்லை என்று எச்சரிக்கிறோம்.
293-வது ஆதீனமாக நித்யானந்தாவை பட்டம் சூட்டியதில் எந்த மாற்றமும் இல்லை. இதற்காக எழுப்பப்படும் எந்த விமர்சனத்தையும் ஏற்கமாட்டோம் என்றார் அவர்.
Comments
English summary
Kanchi sankarachariyar Jayendrar's comments unnecessary, says Madurai Aadheenam. He also advised him not to meddle in Madurai aadheenam issues.
Story first published: Thursday, May 10, 2012, 12:03 [IST]