For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பரமக்குடி: போலி ஏ.டி.எம். மூலம் வங்கிக் கணக்கில் இருந்து ரூ1 லட்சம் திருட்டு?

Google Oneindia Tamil News

பரமக்குடி: பரமக்குடி கனரா வங்கியில் வாடிக்கையாளர் ஒருவரது வங்கிக் கணக்கில் இருந்த ரூ1 லட்சம் பணம் மாயமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பரமக்குடி கனரா வங்கியில் வெளிநாட்டில் வேலை பார்க்கும் தனசேகரன் என்பவர் அக்கவுண்ட் வைத்துள்ளார். அவர் தமது வங்கிக் கணக்தை இணையம் மூலம் கவனித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு திடீரென தமது வங்கிக் கணக்கில் இருந்து ரூ1 லட்சத்து 16 ஆயிரத்து 500 குறைந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது தொடர்பாக மின் அஞ்சல் மூலமாக ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார் அனுப்பினார். ஆனால் இதனை காவல்துறையினர் ஏற்க மறுத்துவிட்டனர். இதைத் தொடர்ந்து அவரது உறவினர் மூலமாக புகார் மனு கொடுக்கப்படுள்ளது.

போலி ஏ.டி.எம், கார்டு அல்லது இண்டர்நெட் டிரான்ஸ்பர் மூலம் பணம் திருடப்பட்டுள்ளதா? அல்லது வங்கி ஊழியர்களின் கைவரிசையா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
Rs 1 lakh in has disappeared in Paramakkuti customer's Canara Bank bank account.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X