For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெரும் டீசல் தட்டுப்பாடு: காய்கறிகள் வரத்து பாதிப்பு; விலையும் கடுமையாக உயர்வு!

By Chakra
Google Oneindia Tamil News

Vegetables
சென்னை: கடும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் சரக்கு வாகனங்கள் இயங்காததால் காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

லாரி, மினி லாரி, டெம்போ, வேன்கள் டீசல் கிடைக்காததால் பெட்ரோல் பங்குகளில் காத்து கிடக்கின்றன.

இதனால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வருவதும், அங்கிருந்து காய்கறிகளை சென்னையின் பல்வேறு மார்க்கெட்டுகளுக்கு கொண்டு செல்வதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் காய்கறிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு விலையும் மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது.

மீன் பாடி வண்டிகளிலும், மாட்டு வண்டிகளிலும், டிரை சைக்கிள்களிலும் காய்கறிகள் எடுத்துச் செல்ல வேண்டிய நிலைக்கு வியாபாரிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதை நிலை தொடர்ந்தால் வரும் நாட்களில் காய்கறி விலை மேலும் உயரும் என்று வியாபாரிகள் எச்சரித்துள்ளனர்.

English summary
Already hit hard by disruption in supply of diesel the vegetable prices gone up in Chennai Koyambedu market
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X