For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெகன் சொத்துக் குவிப்பு வழக்கு: இந்தியா சிமெண்ட்ஸ் தலைவர் சீனாவசனிடம் சிபிஐ கிடுக்குப் பிடி விசாரணை

By Mathi
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவரும் கடப்பா தொகுதி எம்.பியுமான ஜெகன் மோகன் ரெட்டி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவரும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவருமான சீனிவாசனிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

ஆந்திர மாநில முதல்வராக ராஜசேகர ரெட்டி இருந்தபோது அமைச்சர்கள் உதவியுடன் வருமானத்துக்கு அதிகமாக ஜெகன் மோகன் ரெட்டி சொத்து சேர்த்தார் என்பது சி.பி.ஐ. புகார். இந்த வழக்கில் ஜெகன் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ராஜசேகர ரெட்டி ஆட்சிக் காலத்தில் சிமெண்ட் தயாரிப்புக்காக ஆற்று நீரை முறைகேடாக பயன்படுத்திக் கொள்ள சிமெண்ட் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்ததாகவும் இந்த நிறுவனங்கள் இதற்குப் பிரதிபலனாக ஜெகன் மோகனின் நிறுவனங்களில் பலநூறு கோடியை முதலீடு செய்திருப்பதாகவும் சிபிஐ குற்றம்சாட்டி இருந்தது. இது தொடர்பாக விசாரணைக்கு வருமாறு இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவரும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவருமான சீனிவாசனுக்கும் சம்மன் அனுப்பியிருந்தது சிபிஐ.

இதைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் சிபிஐ முன்பு இன்று காலை ஆஜரான சீனிவாசனிடம் சிபிஐ கிடுக்குப்பிடி விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

English summary
India Cements MD and BCCI Chief N. Srinivasan today appeared before the CBI in connection with the alleged disproportionate assets case against Jagan Mohan Reddy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X