For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரணாப் எனக்கு போன் செய்தார், ஆனால்...: நிதிஷ் குமார்

By Siva
Google Oneindia Tamil News

பாட்னா: பிரதமர் மன்மோகன் சிங் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு குடியரசுத் தலைவர் வேட்பாளர் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு கேட்டதாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

ஐக்கிய ஜனதாதளம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்த தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டோம். அதில் குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அது குறித்து இன்னும் நிறைய ஆலோசிக்க வேண்டியுள்ளது.

இது தொடர்பாக இன்னும் பல கூட்டங்கள் நடக்கும். நான் சங்கமாவிடம் இன்னும் பேசவில்லை. அவர் என்னுடன் பேச விரும்புவதாகக் கேள்விப்பட்டேன். காங்கிரஸ் பிரணாப் முகர்ஜியை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்த பிறகு பிரதமர் மன்மோகன் சிங் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரணாபுக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டு்க கொண்டார். பிரணாபும் என்னுடன் தொலைபேசியில் பேசினார். ஆனால் அப்போது அவர் ஆதரவு கோரவில்லை என்றார்.

English summary
Bihar CM Nitish Kumar told that PM Manmohan Singh contacted him after congress announced PRanabh Mukherjee as the presidential candidate and asked him to support the finance minister.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X