கருப்புக் கண்ணாடியுடன் கலக்கிய மு.க.ஸ்டாலின்.. கருணாநிதியின் அடுத்த வாரிசா??

திமுக செயற்குழுக் கூட்டம் அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று நடந்தது. திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தமிழகம் முழுவதுமிருந்து வந்திருந்த செயற்குழு உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு வந்த அத்தனை பேரின் பார்வையும் ஸ்டாலின் மீதுதான் இருந்தது. காரணம், அவர் போட்டிருந்த கருப்புக் கண்ணாடி. கருப்புக் கண்ணாடியுடன் கருணாநிதிக்குப் பக்கத்தில் அவர் அமர்ந்திருந்த விதம் ஆயிரம் அர்த்தங்களைச் சொல்வதாக திமுகவினர் நமுட்டுச் சிரிப்புடன் பேசிக் கொண்டனர்.
தலைவரைப் போலவே தளபதியும் கருப்புக் கண்ணாடியுடன் வந்திருப்பதால் இவர்தான் அடுத்த வாரிசு என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்களா என்றும் சிலர் பேசிக் கொண்டனராம்.
கருப்புக் கண்ணாடியுடன் ஸ்டாலின் வந்ததற்குரிய காரணம் சொல்லப்படவில்லை. ஒரு வேளை இது தெரிந்துதான் மு.க.அழகிரி கூட்டத்திற்கு வராமல் போய் விட்டாரா என்று தெரியவில்லை!!












Click it and Unblock the Notifications