For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜாமீன் தேவையில்லை... மனுவை திரும்பப் பெற்றார் வீரபாண்டி ஆறுமுகம்

Google Oneindia Tamil News

Veerapandi Arumugam
வேலூர்: குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் திமுக அமைச்சரும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான வீரபாண்டி ஆறுமுகம், தான் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவை இன்று காலை திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டார்.

சேலம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள அங்கம்மாள் காலனியில் குடிசைகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உள்பட 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில் வீரபாண்டி ஆறுமுகம் வேலூர் சிறையிலும், மற்றவர்கள் சேலம் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

முதலில் சேலம் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி விண்ணப்பித்த வீரபாண்டி ஆறுமுகம், அங்கு ஜாமீன் கிடைக்காததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த தனது மனுவை, வீரபாண்டி ஆறுமுகம் இன்று திடீரென வாபஸ் பெற்றார்.

வீரபாண்டியார் மீது அதிமுக அரசு குண்டர் சட்டத்தையும் பாய்ச்சியிருப்பது நினைவிருக்கலாம்.

English summary
Former DMK minister Veerapandi Arumugam has withdrawn his bail plea which was filed in Madras HC.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X