For Daily Alerts
Just In
பிரணாப், சங்மாவுக்கு மல்லுக் கட்டப் போகிறாராம் பத்மராஜன்
டெல்லி: குடியரசுத் தேர்தலில் பிரணாப் முகர்ஜி, சங்மாவுக்கு "ஈடு கொடுத்து" போட்டியிட தேர்தல் மன்னன் பத்மராஜன் மனுதாக்கல் செய்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஏற்கெனவே 3 முறை போட்டியிட்டுள்ளார். 4 வது முறையாக இந்த தேர்தலில் களம் இறங்கி உள்ளார்.டெல்லியில் ரூ.15 ஆயிரம் டெபாசிட் கட்டி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
நடுப்பட்டி பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்கு ஒருமுறை, பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு 11 முறை, நகராட்சி தலைவர் பதவிக்கு 3 முறை, மேயர் பதவிக்கு ஒரு முறை, இந்தியா முழுவதும் சட்டமன்ற தேர்தல்களில் 44 முறை, மக்களவைக்கு 24 முறை, மாநிலங்களவைக்கு 27 முறை உள்பட இதுவரை 134 முறை தேர்தல் களத்தை சந்தித்துள்ளார் தேர்தல் மன்னன் பத்மராஜன்!
Comments
English summary
Self-proclaimed ‘poll king’ K. Padmarajan filed his nomination papers for the Presidential Poll.
Story first published: Saturday, June 23, 2012, 12:43 [IST]