அந்நியர் பிரதமராகக் கூடாது என்பதில் சாகும்வரை உறுதியாக இருப்பேன்- சங்மா
2004ம் ஆண்டு தேர்தல் முடிந்த பிறகு சோனியா காந்தி பிரதமராவதைத் தாம் தடுக்கவிலை என்று முனாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் தமது புத்தகம் ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த சங்மா, என்னுடைய தனிப்பட்ட கருத்து. இப்பவும் சரி நான் சாகும் வரைக்கும் சரி... என்னுடைய நிலைப்பாடு ஒன்றுதான்....ஒருபோதும் இந்த நாட்டின் பிரதமர் பதவியை அன்னிய நாட்டவர் ஒருவர் ஏற்கக் கூடாது என்பதுதான். இதில் நிச்சயம் நான் உறுதியாக இருப்பேன் என்றார்.
1999-ம் ஆண்டு சோனியா வெளிநாட்டவர் என்ற பிரச்சனையை முன்வைத்து காங்கிரசிலிருந்து வெளியேறி தேசியவாத காங்கிரஸை உருவாக்கியவர்களில் பி.ஏ.சங்மாவும் ஒருவர். தற்போது குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட சங்மா விரும்பி சோனியாவை சந்திக்க முயற்சித்தார். ஆனால் சோனியா நேரம் ஒதுக்கவில்லை. இந்த நிலையில் சோனியாவுக்கு எதிரான தமது நிலைப்பாட்டை மீண்டும் ஒருமுறை