ஸ்ரீவைகுண்டம் அருகே பெண் எரி்த்து கொலை
தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள காட்டுப் பகுதியில் இளம்பெண் எரிந்த நிலையில் பிணமாகக் கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக இளம்பெண்கள் காணாமல் போவது அதிகரி்த்து வருகிறது. கடந்த 3 மாதங்களில் மட்டும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் 20க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். இதில் 7 பேர் மீட்கப்பட்டுள்ளனர். பெரும்பாலானோர் காதல் மற்றும் கள்ளத்தொடர்பு காரணமாக வீட்டை விட்டு வெளியேறியது விசாரணையில் தெரிய வந்து்ள்ளது.
மீதமுள்ள 13 பேர் எங்கு உள்ளனர் என்ற எந்தவிதமான தகவலும் தெரியவில்லை என்பதால் அவர்களின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் கலக்கத்தில் உள்ளனர். மேலும் ஆங்காங்கே இளம் பெண்களின் உடல்கள் மீட்கப்படுவதால் அவர்கள் குறித்த பயம் அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் புதூர் அருகே இளம்பெண் உடல் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள காட்டுப் பகுதியில் இளம்பெண் எரிந்த நிலையில் பிணமாகக் கிடந்தார். அவர் உடல் கிடந்த இடத்தில் பிராந்தி பாட்டில்கள், டம்ளர்கள் கிடந்ததால் அவர் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.