For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறுநீர் குடிக்கிறதும் கூட ஒருவகை மருத்துவம்தான்.. நானும் குடிச்சிருக்கேன்: சுவாமி அக்னிவேஷ்

By Mathi
Google Oneindia Tamil News

Swami Agnivesh
டெல்லி: மேற்குவங்கத்தில் 5-ம் வகுப்பு மாணவியை விடுதி வார்டன் சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் வார்டனின் செயலை நியாயப்படுத்தியிருக்கிறார் பிரபல சமூக ஆர்வலரான சுவாமி அக்னிவேஷ்.

இது தொடர்பாக அக்னிவேஷ் கூறியுள்ளதாவது:

படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தைக் கட்டுப்படுத்த சிறுமிக்கு வார்டன் அந்த சிறுமியின் சிறுநீரை குடிக்கச் செய்த விவகாரம் பெரிதாகப் பேசப்பட்டு வருகிறது. எனக்கும் கூட ஒருகுறிப்பிட்ட வயதுக்காலம் வரைக்கும் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பிரச்சனை இருந்து வந்தது. அப்போது எனது சிறுநீரை குடித்தேன். இதை சிவம்பு அல்லது ஸ்வமூத்ரா சிகிட்சா என்பார்கள். அவசரநிலைப் பிரகடன காலத்தின் போது அம்பாலா சிறையில் இருந்த போதுகூட இந்த வழக்கத்தை கடைபிடித்தேன்.

சிறுநீர் குடிப்பது என்பதை ஒருவகையான பாரம்பரிய மருத்துவமுறை என்பதை நான் புத்தகங்களில் படித்திருக்கிறேன். இவ்வளவு ஏன் முன்னாள் பிரதமர் மொராஜி தேசாய், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், ஹரியானா முன்னாள் முதல்வர் தேவிலால் ஆகியோரும் கூட தங்களது சிறுநீரை குடிக்கும் பழக்கம் கொண்டவர்கள்தானே.. என்று அதில் கூறியுள்ளார்.

English summary
A nationwide outrage over a Visva-Bharati warden asking a class 5 student to drink her urine for bed-wetting notwithstanding, social activist Swami Agnivesh claimed on Tuesday that this was a "traditional cure" for such a condition
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X