For Daily Alerts
Just In
குடியரசுத் தலைவர் தேர்தல்: பால்தாக்கரேயுடன் பிரணாப் சந்திப்பு
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தபோதும் சிவசேனை கட்சியானது காங்கிரஸின் பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதாக அறிவித்தது. குடியரசுத் தலைவர் தேர்தலில் தமக்கு ஆதரவு அளித்ததற்காக நேற்றைய சந்திப்பின் போது பால்தாக்கரேவுக்கு பிரணாப் நன்றி கூறினார்.
மும்பையில் உள்ள பால்தாக்கரேயின் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பு 20 நிமிடங்கள் நீடித்தது. இச்சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரணாப், தமக்கு ஆதரவு தெரிவித்த பால்தாக்கரேவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டேன் என்றார்.
இதேபோல் செய்தியாளர்களிடம் பேசிய பால்தாக்கரே, சங்மா எனது நண்பர்தான். ஆனால் குடியரசுத் தலைவர் தேர்தலில் நட்பு அல்லது சாதி பார்க்கக் கூடாது என்றார்
இச்சந்திப்பின் போது மத்திய அமைச்சர் பால்தாக்கரே உடன் இருந்தார்.
Comments
English summary
UPA's presidential candidate Pranab Mukherjee on Friday night met Shiv Sena chief Bal Thackeray at latter's residence Matoshree' here, to thank him for the support in the election.
Story first published: Saturday, July 14, 2012, 10:37 [IST]