For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

23 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய இலங்கையிடம் மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தல்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 23 தமிழக மீனவர்களை உடனே விடுதலை செய்யுமாறு இலங்கையை வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழகத்தின் ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகவும் ஆயுதம் தாங்கிய இலங்கை கடற்படையினரை மிரட்டியதாகவும் கடந்த வாரம் கைது செய்தது. தமிழக மீனவர்களின் கைது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் தலையிட வலியுறுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியிருந்தார். ராமேஸ்வரம் மீனவர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மனிதாபிமான அடிப்படையில் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா வலியுறுத்தியுள்ளார்.

English summary
India on Thursday urged Sri Lanka to immediately release on humanitarian grounds 23 Tamil Nadu fishermen, arrested on charges of entering the island nation's waters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X