For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தென்காசி அருகே வறுமையின் கொடுமையால் குடும்பத்தோடு தற்கொலை முயற்சி: பெண் பலி

Google Oneindia Tamil News

Poverty kills a mother of 3
தென்காசி: தென்காசி அருகே வறுமையின் கொடுமை தாங்க முடியாமல் ஒரு குடும்பமே தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளது. இதி்ல் குடும்பத் தலைவி பலியானார்.

தென்காசி அருகே உள்ள நன்னகரம் பகுதியைச் சேர்ந்தவர் தொழிலாளி சந்திரன். அவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், கவிதா(7) ,விஜய்(6), விஸ்வா(4) ஆகிய 3 குழந்தைகளும் உள்ளனர்.

இந்த குடும்பத்தில் சந்திரன் மட்டுமே வேலைக்கு செல்வதால் அவரின் வருமானம் குடும்பத்திற்கு போதவில்லை. இதனால் வெளியில் கடன் வாங்கி குடும்ப செலவுகளை கவனித்து வந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பிக் கேட்டு தொல்லை கொடுத்தனர். இதனால் மனமுடைந்த ஜெயந்தி இன்று காலை பாலில் விஷத்தை கலந்து குழந்தைகளுக்கும், கணவனுக்கும் கொடுத்துவிட்டு தானும் குடித்து தற்கொலை செய்ய முயன்றார்.

விஷம் கலந்த பாலைக் குடித்ததில் ஜெயந்தி மட்டும் பரிதாபமாக உயிர் இழந்தார். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மற்றவர்களை தென்காசி மாவட்ட மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவீர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வறுமையின் கொடுமையால் ஒரு குடும்பமே தற்கொலை முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.

English summary
A coolie's wife gave poisoned milk to her husband and 3 kids and drank herself. While her husband and kids are hospitalised, she died.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X