For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மகன் தூக்கில் தொங்கியதை பார்த்து குளத்தில் குதித்து தற்கொலை செய்த பெற்றோர்

By Mathi
Google Oneindia Tamil News

காட்பாடி; கடன் தொல்லையால் மகன் தூக்கில் தொங்குவதை பார்த்த தாய்-தந்தை இருவரும் கோவில் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் செங்குட்டை பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ஏகாம்பரம்- மல்லிகா தம்பதியினரின் மகன் மதன்குமார், ஜவுளிக் கடை ஒன்றை நடத்தி வந்தார். மதன்குமாருக்கு ஒன்றரை ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஜவுளிக் கடையுடன் கார் வாங்கி விற்கும் தொழிலையும் நடத்தினார். ஆனால் அதில் நட்டம் ஏற்பட்டது. இதனால் கடன் வாங்கினார். ஆனால் கொடுத்த கடனைக் கட்ட முடியாமல் மதன்குமார் கஷ்டப்பட்டுள்ளார்.

இதனால் கடந்த வாரம் பெற்றோருடன் தற்கொலை செய்து கொள்வதற்காக சென்னை மெரினாவுக்கு கடந்த வாரம் சென்றுள்ளனர். ஆனால் மருமகள்தான் சமாதானப்படுத்தியிருக்கிறார்.

இந்நிலையில் பெற்றோரும் மனைவியும் வீட்டில் இல்லாத நேரத்தில் அதிகாலையில் மனைவியின் சேலையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைப் பார்த்த மதனின் பெற்றோர்

இதைப்பார்த்த அவரது தந்தை ஏகாம்பரம், தாயார் மல்லிகா இருவரும் கதறி அழுதவாறே தாங்களும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டை விட்டு வெளியேறினர். இருவரும் அருகில் உள்ள திரவுபதியம்மன் கோவில் குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர். இது பற்றி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
In Katpadi Parents have committed suicide by jumping into the pool for their son's suicide death.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X