For Daily Alerts
Just In
மனிதர்களைத் தொடர்ந்து சென்னையில் நாய்களுக்கும் காலரா!!
சென்னை: சென்னை நகரில் காலராவும், வாந்தி-பேதி பரவி வருவதை மாநகராட்சி மறைக்க முயன்று வரும் நிலையில் தற்போது வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்கும் ரத்த பேதி நோய் பரவி வருகிறது.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட நாய்கள் ரத்தம் கலந்த மலம் கழிக்கும். இதனால் நாய் இறப்பதோடு மட்டுமல்லாமல் அது பிற நாய்களுக்கும் பரவ வாய்ப்புண்டு.
கடந்த சில தினங்களில் மட்டும் 15 நாய்கள் இந்த நோயால் தாக்கப்பட்டு சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக் கொண்டு வரப்பட்டுள்ளன.
முன்னதாகவே நாய்களுக்கு தடுப்பூசி போட்டால் நோய் பரவாமல் தடுக்கலாம். நாய் வளர்ப்பவர்கள் நாய் இருக்கும் இடத்தில் பிளீச்சிங் பவுடர் தூவ வேண்டும். நாய் தங்கும் பகுதியை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
English summary
Canine cholera is spreading in Chennai following cholera among people.
Story first published: Wednesday, August 1, 2012, 13:25 [IST]