For Daily Alerts
Just In
சேலம் மாவட்டத்தில் 7 போலி மருத்துவர்கள் கைது
சேலம்: சேலம் மாவட்டத்தில் ஒரே நாளில் ஒரு பெண் உட்பட 7 போலி மருத்துவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் அருகே நாக்கியம்பட்டியை சேர்ந்த சின்னசாமி, 9-ம் வகுப்பு வரைதான் படித்திருந்தார். அவர் பல் மருத்துவ கிளினிக் நடத்தி வந்தார். சின்னசாமி போலீசில் தொடர்ந்து புகார் வந்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அங்கிருந்த 3 பல்செட், 12 தனிப் பல்கள் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் சேலத்தை அடுத்த வீராணம் குப்பனூரை சேர்ந்த ரத்தினவேல், பொதுமருத்துவர் என்று கூறி சிகிச்சை அளித்து வந்திருக்கிறார். அவர் மீதும் புகார் வரவே அவரும் போலீசார் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து சேலம் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் மொத்தம் 7 போலி மருத்துவர்கள் பிடிபட்டனர். இவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
English summary
A joint operation by the police team to arrest of 7 fake doctors in the Salem district.
Story first published: Saturday, August 4, 2012, 17:04 [IST]