For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

26/11 தாக்குதல்: சிறையில் ஜிண்டாலை அடையாளம் காட்டிய கசாப்

By Siva
Google Oneindia Tamil News

Abu jundal and Kasab
மும்பை: 26/11 தாக்குதலுக்கு மூளையாக இருந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி அபு ஜிண்டாலை அதே தாக்குதல் வழக்கில் கைதாகி மும்பை சிறையில் உள்ள பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் அடையாளம் காட்டினான்.

26/11 தாக்குதல் வழக்கில் கைதான பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் கடந்த 2008ம் ஆண்டு முதல் மும்பை ஆர்தர் ரோட்டில் உள்ள சிறையில் சிறப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளான். இந்நிலையில் இந்த தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட அபு ஜிண்டால் டெல்லி போலீசாரிடம் சிக்கினான். இதையடுத்து கசாப் மற்றும் ஜிண்டாலை ஒரே இடத்தில் வைத்து விசாரிக்க அனுமதி அளிக்குமாறு மகாராஷ்டிரா அரசை மும்பை கிரைம் போலீசார் கேட்டுக் கொண்டனர்.

அதற்கு மாநில அரசு அனுமதி அளித்ததையடுத்து ஜிண்டால் ஆர்தர் ரோடு சிறைக்கு கொண்டு வரப்பட்டான். அங்கு கசாபும், ஜிண்டாலும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். ஜிண்டாலைப் பார்த்ததும் கசாப் அடையாளம் கண்டு கொண்டான். மேலும் மும்பை தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவர்களில் ஜிண்டாலும் ஒருவன் என்று போலீசாரிடம் தெரிவித்தான்.

இதையடுத்து அவர்கள் இருவரிடமும் சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. ஜிண்டால் கசாபுக்கு தீவிரவாத பயிற்சி அளித்தவன் என்று நம்பப்படுகிறது.

English summary
Nearly three years after the 26/11 Mumbai terror attack, Ajmal Kasab, the lone surviving attacker, was on Aug 9 brought face to face with Abu Jundal whom he identified as one of the main conspirators of the mayhem, Mumbai police said.
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X