For Daily Alerts
Just In
இமாச்சலப் பிரதேசத்தில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து- 52 பேர் பலி
சம்பாவிலிருந்து துலேரா நோக்கி 100 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது ரஜேரா என்ற இடத்தில் பள்ளத்தில் பேருந்து திடீரென கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 32 பேர் உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 20 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உயிரிழந்தோரில் பெரும்பாலானோர் சம்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு மாநில முதல்வர் பி.கே. துமல் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
English summary
At least 52 people, including 18 women and two children, were today killed and 46 others injured when an overcrowded private bus veered off the road and fell into a gorge in Himachal Pradesh's Chamba district.