For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விபத்தில் சிக்கி உயிருக்கு போரடிய இளைஞர்களை காப்பாற்றிய வைகோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திருப்புவனம் : திருப்புவனம் அருகே, விபத்தில் சிக்கி உயிருக்குப் போரடிக்கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ காப்பாற்றி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

பரமக்குடியில் நடைபெற்ற விழா ஒன்றிருக்கு சென்றுவிட்டு மதுரை - ராமேஸ்வரம் மெயின்ரோட்டில், கார் மூலமாக வைகோ, திரும்பி வந்து கொண்டிருந்தார். அவரைத் தொடர்ந்து தொண்டர்கள் கார்களில் சென்று கொண்டிருந்தார். திருப்புவனம் அருகே, கழுகேர்கடை விலக்கு அருகே அவரது கார் வந்து கொண்டிருந்த போது அங்கே விபத்தில் சிக்கிய இரண்டு இளைஞர்கள் கால் முறிந்த நிலையில் துடித்துக் கொண்டிருந்தனர்.

இரு பக்கமும் சென்ற பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வேடிக்கை பார்த்தனரே தவிரை யாரும் காப்பாற்றவோ, உதவி செய்யவோ முன்வரவில்லை. உடனே காரை நிறுத்திய வைகோ, காரை விட்டு இறங்கி, வலியால் துடித்துக் கொண்டிருந்த இருவரையும், மோதிய வேனிலேயே ஏற்றி, முதலுதவி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். கட்சியினர் இருவரையும் உடன் அனுப்பி, தகுந்த சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டார்.

விபத்தில் சிக்கிய இளைஞர்கள் திருப்பாச்சேத்தி ஆவரங்காட்டைச் சேர்ந்த மருதுபாண்டி,24, முனியாண்டிசாமி,24, என்பவராவர். மதுரைக்கு பைக்கில் சென்றபோது விபத்தில் சிக்கியுள்ளனர். அந்த நேரத்தில் அங்கு வந்த வைகோ இளைஞர்களை காப்பாற்றி சிகிச்சைக்கு அனுப்பி வைத்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

English summary
Marumalarchi Dravida Munnetra Kazhagam (MDMK) general secretary Vaiko played Good Samaritan on Friday and got down on the road to help two accident victims near Madurai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X