For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் செய்த தப்பு மணிகண்டனை டைவர்ஸ் செய்யாமல் பிரசன்னாவை மணந்ததுதான்... சஹானாஸ்

Google Oneindia Tamil News

Sahanas
சென்னை: 50க்கும் மேற்பட்ட ஆண்களை மோசடியாக மணந்து பெரும் லீலை புரிந்து மோசடி செய்ததாக குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள கேரளப் பெண் சஹானாஸ் ஒரு பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் தான் அத்தனை பேரை மணந்து மோசடி செய்யவில்லை என்று அவர் விளக்கியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் 'நக்கீரனுக்கு' அளித்துள்ள பேட்டி...

சஹானாஸ் - உங்ககிட்ட இதைச் சொல்றதால என் கஷ்டம் கொஞ்ச மாயிட்டு கொறையுமில்லா... கேரளாவில பத்தனம்திட்டாவுல ரெண்டு அக்கா, ஒரு அண்ணாவோட பிறந்தேன். எனக்கு அம்பது பேரோட கல்யாணம் ஆச்சுன்னு சொல்றது சரியா இல்ல. லைஃப்ல நான் பண்ண ஒரே தப்பு போரூர் மணிகண்டனை டைவர்ஸ் பண்ணாம புளியந்தோப்பு பிரசன்னாவை மேரேஜ் செஞ்சதுதான்.

நீங்க இப்போ கர்ப்பிணின்னு சொல்லப்படற விஷயம்...?

சஹானாஸ்: யெஸ்... நான் "கன்சீவ்'வாத்தான் இருக்கேன். இது ஆறாவது மாசம். இந்த குழந்தையோட அப்பா பிரசன்னாதான்.

பிரசன்னா இதை மறுத்திருக்காரே?

சஹானாஸ்: "டி.என்.ஏ. டெஸ்ட்'டுல தெரிஞ்சுருமே. பிரசன்னா அக்ஸப்ட் பண்ணலேன்னாலும், பேபிக்கு இனிஷியல் "பி'யிலதான் ஆரம்பிக்கும். அத நான் பாத்துக்கிறேன். முதல்ல என்னைப் பத்தி ஏன் இவ்வளவு தப்பா நியூஸ் வருதுன்னு நீங்க தெரிஞ்சுக்கணும். பேப்பர்ல அட்வர்டைஸ்மென்ட் பாத்துட்டு 2006-ல மெட்ராஸ் வந்து ஒரு ஜாப்ல சேர்ந்தேன். அந்த சூப்பர் மார்க்கெட் ஓனர்தான் இவ்வளவு கதையும் "ப்ளே' பண்ற ஆளு. ஒரு போட்டோவை வாங்கறதுக்காகத்தான் நான் இவ்வளவு கஷ்டத்தையும் அனுபவிக்கிறேன்.

அது என்ன போட்டோ?

சஹானாஸ்: சூப்பர் மார்க்கெட்ல லேடிஸ் டிரஸ் சேஞ்ச் பண்ற ரூம்ல அந்தாளு கேமரா பிக்ஸ் பண்ணி வச்சிருக்கார். என்னோட "நியூட்' போட்டோ இப்படித்தான் அவர்கிட்ட மாட்டிகிச்சி. இந்தமாதிரி எல்லா பொண்ணுங்களையும் அவர் படமெடுத்து வச்சிருக்காரு. நான்தான் இதை கண்டுபிடிச்சேன். இதில்லாம அந்தாளு செய்ற இல்லீகல் பிஸினஸ் பத்தி ஃபுல் டீடெய்ல் எனக்கு மட்டும்தான் தெரியும். ஒருநாள் அந்தாளு "ரூட்' விட்டுப் பாத்தாரு. நான் சிக்கலே. கடைசியா இந்த போட்டோவைக் காட்டி மிரட்டினாரு. 26 வயது பெண் என்மேல அறுபது வயது ஆளுக்கு வந்த ஆசை இருக்கே...

தமிழ் நல்லா பேசறீங்க. கேரளா வாடை லேசாகத்தானே இருக்கு?

சஹானாஸ்: நீங்க என்ன கேக்கறீங்கன்னு தெரியுது. கேரளாவுல பத்தனம்திட்டாதான் என் நேட்டிவ். நான் உருது முஸ்லிம். ஸோ... உருதும், மலையாளமும் நல்லா வரும். இங்கிலீஷ், தமிழ் பேசுவேன். தமிழ் படிக்கத் தெரியாது. உங்க நியூஸையே ஃபிரண்ட்ஸுங்கதான் படிச்சுக் காட்டுனாங்க.

நீங்க "லா' முடிச்சிருக்கிறதாவும், ஐ.ஏ.எஸ். ஸ்டடி பண்ணிட்டு இருக்கறதாவும் பிரசன்னா சொல்லியிருக்காரே? எந்த வருஷம் லா முடிச்சீங்க?

சஹானாஸ்: நான் "லா' படிக்கல.

நீங்க சொல்றபடி உங்க முதல் கணவர் போரூர் மணிகண்டனும், பிரசன்னா சொன்னதைத்தானே சொல்றாரு?

சஹானாஸ்: இவங்க ரெண்டுபேருமே இப்போ அந்த சூப்பர் மார்க்கெட் ஓனரோட ஆளா மாறிட்டாங்க. அதனால அப்படித்தான் பேசுவாங்க. ஆக்ஷுவலா நான் படிச்சதே பி.ஏ. ஹிஸ்டரி மட்டும்தான்.

நீங்க அட்வகேட்டுக்கான டிரஸ்ல பலமுறை ஸ்கூட்டியில வந்ததை பிரசன்னா, மணிகண்டன் ரெண்டுபேருமே கன்ஃபார்ம் பண்றாங்களே...

சஹானாஸ்: அவங்களுக்கு அந்த அறுபது வயது ஆளு, மண்டையில நல்லா ஏத்தி விட்டிருக்காரு. அவ்வளவுதான் சொல்வேன்.

திருச்சி பஜார் ரோடு ராகுலுக்கும் உங்களுக்கும் சென்னை வடபழனியில கல்யாணம் நடந்ததை ராகுல் ஒப்புக் கொண்டிருக்கிறார். அதேபோல்தான் அடையார் சரவணனும்... உங்கள் மீது போலீசில் புகார் செய்த 7 பேரில் 4 பேர் இதுவரை நேரில் வந்துள்ளனர். நீங்களோ மணிகண்டன், பிரசன்னா இருவரை மட்டுமே கணக்கில் காட்டுகிறீர்கள்.

சஹானாஸ்: மணிகண்டன் கூட மே. 2011-ல மேரேஜ் பண்ணி 2 மாசம்தான் வாழ்ந்தேன். உள்ளே நுழைஞ்சி ஊர் பஞ்சாயத்து மாதிரி பண்ணி எங்களை பிரிச்சு என்னை அனாதையாக்கிட்டாரு சூப்பர் மார்க்கெட் முதலாளி. பிறகுதான் பிரசன்னாவை மேரேஜ் பண்ணினேன். ராகுல் விஷயம் (சற்று யோசனையுடன்) ஒரு சினிமா கனவு மாதிரி. அவர் சினிமா ஆர்ட் டைரக்டர். ரொம்ப நல்லவர். யெஸ்... மேரேஜ் நடந்தது உண்மைதான். இதுக்குமேல இதுல பேச விரும்பல. அந்த விஷயம் வேண்டாமே... பிரிஞ்சிட்ட பிறகு பேச என்ன இருக்கு?

சரி... விட்ருவோம். இதுவரைக்கும் மூணு... அடையார் சரவணன்...?

சஹானாஸ்: ஜஸ்ட் ஃப்ரெண்ட் அவ்வளவுதான். சொஸைட்டியில ஒரு பொண்ணு தனியா துணையில்லாம வாழ்ந்தா என் முதலாளி மாதிரி கிழட்டுப் பூனைங்க கிட்டயும் சில மண்டக்குச்சிங்க கிட்டயும் மாட்டி சீரழிய வேண்டியதுதான். மணிகண்டனோட வாழத் தொடங்குனதும் பிரிச்சாச்சு. அதுக்கு முன்னால ராகுலோட வாழ ஆரம்பிச்சு -அதுவும் அந்தாளு பிரிச்சாச்சு.

இப்போ பிரசன்னாவும் போயாச்சு. சரவணன், சீனிவாசன்னு என் ஹஸ்பெண்ட் லிஸ்ட்ஸ் பேப்பர்ல வருது. படிச்சுக் கேட்டா தலை சுத்துது. ஃப்ரண்ட் ஸுங்க கூட எடுத்துக்கிட்ட போட்டோவை யெல்லாம் கலெக்ட் பண்ணி, அந்தாளு என் ஹஸ்பெண்ட்கள்னு சொல்றாரு.

நான் வேலை பார்த்தப்போ தரவேண்டிய சம்பளத்தை பாங்க் அக்கவுண்ட்ஸ்ல ஏத்திடறேன்னு சொல்லி ஒரு வருஷம் ஏமாத்தியாச்சு. ஒருநாள் நான் சண்டை பிடிச்சதும் 1 லட்சத்து 88 ஆயிரம் ரூபாயை கையில குடுத்துட்டு இப்போ திருட்டுப் பட்டம் கட்றாரு. அவருக்கு நான் வேணும் அவ்வளவு தான்.

எனுக்கு அந்தாளுகிட்ட இருக்கிற போட்டோ காப்பி வேணும், அதுக்குதான் இவ்வளவு நாள் பொறுமையா இருந்தேன். நான் வெளில வந்து எல்லாத்தையும் போலீஸ்ல சொல்லத்தான் போறேன். விடமாட்டேன். என் உயிருக்கு ஆபத்து கண்டிப்பா வரும். இப்பவும் என்னை கொன்னுப்போட அந்தாளோட ஆளுங்க தேடிக்கிட்டுதான் இருக்கு. நாலு பிச்சைக்காரியோட ஒருத்தியா ரயில்வே ஸ்டேஷன்ல நைட்ல பசியோட படுத்துக்கிட்டு இந்த ஒரு வாரமா நான் செத்துக்கிட்டிருக்கேன்.

நீங்களாகவே இதுவரை மணிகண்டன், பிரசன்னா, ராகுல் ஆகியோரோடு கல்யாணம் நடந்ததா சொல்லியிருக்கீங்க. வேப்பேரி போலீஸ்ல நீங்க ஏமாத்துனதா சொல்லி 2010-லேயே ராஜேஷ்னு ஒருத்தரு புகார் கொடுத்திருப்பதா சொல்றாங்க. பிரசன்னாவோட புளியந்தோப்புல நீங்க வாழ்ந்தபோது சுரேஷ்னு ஒருத்தரு உங்களை என் மனைவின்னு சொல்லி புகார் கொடுத்திருக்காரு. ஆனா... நீங்களோ எல்லாத்துக்கும் உங்க முதலாளிதான் காரணம்ங்கிறீங்க?

சஹானாஸ்: ராஜேஷ்ங்கிற கேரக்டரே நீங்க சொல்லித்தான் தெரியுது. வேப்பேரியில குடுத்த கம்ப்ளைண்டே வேற... என்கூட வேலை பார்க்கிற பொண்ணோட செயினை வாங்கிப் போட்டுக்கிட்டு ஊருக்குப்போன இடத்துல கொஞ்சம் லேட்டாயிடுச்சு. என் சூப்பர் மார்க்கெட் ஓனர் சொல்லி அந்தப் பொண்ணு என்மேல கம்ப்ளைண்ட் குடுத்தா. போலீஸ் என்னைக் கூப்பிட்டாங்க. நேரில் போயி விளக்கம் சொல்லி செயினை குடுத்துட்டேன். மேட்டர் ஓவர்.

அதேபோல புளியந்தோப்பு சுரேஷும் என்மேல கொடுத்தது பொய்ப்புகார். அதையும் நீங்க இன்ஸ்பெக்டர் வசந்திகிட்டயே கேக்கலாம். இதுக்கும் காரணம் அந்தாளுதான். எக்மோர் கமிஷனர் ஆபீஸ்ல அந்தாளு 23-ந் தேதி ஒரு கம்ப்ளைண்ட் குடுத்திருக்காரு. என்னைப் பத்தி தான் புகாரே. 1 லட்சத்து 88 ஆயிரத்தோடு ஓடிட்டேன்னிருக்காரு. அன்னக்கி சாயந்திரமே என்னோட செல்போன் நம்பருக்குப் போன்பண்ணி "இப்ப கூட கம்ப்ளைண்ட்டை வித்ட்ரா பண்ணிக்கறேன். நீ, என்கூட வர்றேன்னு சொல்லு... பிரசன்னா, மணிகண்டன் எல்லாரையும் ஆஃப் பண்ணிடறேன்'னு சொல்றாரு.

சஹானா என்ன சாதாரணமான ஒரு பொண்ணுதானேன்னு என்னை வெச்சி "கேம்' ஆடிப் பாக்கறாரு அந்த பிஸினஸ்மேன். நான் வெளிய வந்து அவரோட முகத்திரையையும், போட்டோவுல இருக்கிற ஹஸ்பெண்ட்ஸுங்க கதையையும் கிழிக்கத்தான் போறேன்... பாக்கத் தானே போறீங்க...

யார் சொல்வது உண்மையோ....?

English summary
Absconding Kerala woman Sahanas has refused all the charges of marriage fraud. She has been absconding after some persons filed complaints against her in the police of cheating.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X