For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூரில் சிக்கிய 'கல்யாண ராணி' ஷானஸிடம் சென்னையில் விடியவிடிய விசாரணை!

By Mathi
Google Oneindia Tamil News

Sahanas
சென்னை: திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகளைக் கூறி 50க்கும் மேற்பட்டோரை திருமணம் செய்து ஏமாற்றியதாக கூறப்படும் ஷானாஸ் பெங்களூரிரில் தனிப்படை போலீசிடம் சிக்கியுள்ளார்.

பிடிபட்ட ஷானாஸை இரவோடு இரவாக சென்னை கொண்டுவந்த தனிப்படை போலீசார் அவரிடம் விடியவிடிய விசாரணை நடத்தினர்.

காதலிப்பதாகவும் தமக்கு பல கோடி சொத்து இருப்பதாகவும் தாம் ஒரு அனாதை என்றும் கூறி இளைஞர்கள் பலரையும் வசியப்படுத்தி ஒருவருக்கு ஒருவரைத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டு அந்த இளைஞர்களின் பணம், நகைகளை பறித்துக் கொண்டு ஏமாற்றியிருக்கிறார் ஷானாஸ் என்பது புகார்.

இது தொடர்பாக சென்னை நகரில் பல காவல்நிலையங்களில் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஷானாஸின் சொந்த மாநிலமான கேரளத்திலும் இதேபோல் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் தாம் வேலை பார்த்த நிறுவன உரிமையாளரின் சதியால்தான் தம் மீது பொய்ப் புகார்கள் கூறப்படுகின்றன என்று ஷானாஸ் கூறியிருந்தார்.

இந்நிலையில் பெங்களூரில் ஷானாஸ் தங்கியிருப்பதை உறுதிப்படுத்திக் கொண்ட தனிப்படை போலீசார் அவரை நேற்று இரவு சுற்றி வளைத்து சென்னைக்கு கொண்டுவந்தனர்.

English summary
A woman who could have married as many as 50 men in order to allegedly con them out of their cash was arrested by Police.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X