அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், செக் குடியரசின் ராடெக் ஸ்டெபானெக் ஜோடி, ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மார்செல் கிரானோலர்ஸ், மார்க் லோபஸ் ஜோடியை எதிர்த்து ஆடியது.
இதில் ஸ்பெயின் நாட்டு ஜோடி முதல் செட்டில் 6-6 என்ற புள்ளியில் இருந்த போது, மார்க் லோபஸ் காயமடைந்தார். இதனால் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து இந்தியாவின் லியாண்டர் பயஸ் ஜோடி வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
போட்டிக்கு பிறகு லியாண்டர் பயஸ் கூறியதாவது,
மார்க் லோபஸின் நிலையை எண்ணி நான் வருந்துகிறேன். நாங்கள் பார்வையாளர்களை சந்தேஷப்படுத்தும் வகையில் இங்கு வந்து விளையாடினோம். ஸ்பெயின் நாட்டு ஜோடியில் சிறந்த வீரர்கள் இருந்தனர். இன்று என்னுடன் ஆட சிறந்த ஜோடி கிடைத்தது. போட்டியில் அவர் எனக்கு பக்கபலமாக செயல்பட்டு, இறுதிப் போட்டிக்கு முன்னேற உதவினார். அடுத்தப்படியாக இறுதிப்போட்டியில் விளையாட காத்திருக்கிறோம் என்றார்.