For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எங்கள் தேவைக்கே தண்ணீர் இல்லை, இதில் தமிழகத்திற்கு எப்படி கொடுப்பது? கர்நாடக முதல்வர் ஷெட்டர்

By Siva
Google Oneindia Tamil News

Jagadish Shettar
குல்பர்கா: தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க முடியாத நிலையில் உள்ளோம் என்பதை மத்திய அரசுக்கு புரிய வைப்போம் என்று கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்தார். தங்களின் தேவைக்கே தண்ணீர் இல்லாததால் தமிழகத்திற்கு வழங்க முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கர்நாடக மாநிலம் குல்பர்காவில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

வரும் 19ம் தேதி டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடக்கும் காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தில் கர்நாடகத்தின் நிலையை எடுத்துரைக்க தயாராக உள்ளோம். கர்நாடகாவில் கடும் வறட்சி நிலவுகிறது. மாநிலத்தில் உள்ள 145 தாலுகாக்களில் 42 காவிரி டெல்டா பகுதியில் உள்ளது. எங்கள் தேவைக்கே தண்ணீர் இல்லை. அதனால் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கவது சாத்தியமில்லை.

தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என்பதில் அனைத்துக் கட்சிகளும் உறுதியாக உள்ளன என்றார்.

இது குறித்து அவர் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினார். அதில் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கக் கூடாது என்று ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Karnataka CM Jagadish Shettar told that his government will try to convince the centre of its inability to release water to Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X