அதிமுகவிலிருந்து 2 மகளிர் அணி நிர்வாகிகள் நீக்கம்- நிர்வாகிகள் மாற்றம்
சென்னை: அதிமுக மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளில் பலரை மாற்றம் செய்துள்ளார் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா. அதே போல புதுக்கோட்டை மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் உசிலை ராணி, புதுக்கோட்டை நகரைச் சேர்ந்த சோனா ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் வேளியூர் எம்.தனசேகரன் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு வாலாஜாபாத் ஒன்றிய செயலாளர் பொறுப்பில் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை தொகுதி செயலாளராக கே.முனுசாமி (சின்ன தகரகுப்பம், செங்காடு), வாலாஜாபேட்டை ஒன்றிய செயலாளராக என்.சி.பூங்காவனம் (ராமர்கோயில்) ஒன்றிய பொருளாள ராக பி.வி.மூர்த்தி (பாகவெளி) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மேற்கு மாவட்ட பொருளா ளராக எம்.எஸ்.என்.குமார் (சிதம்பரம் நகரமன்ற முன்னாள் தலைவர்), எம்ஜிஆர் மன்ற செயலாளராக வாகை வி.இளங்கோவன், மாவட்ட மாணவர் அணி செயலாளராக பி.செந்தில்குமார், விவசாயப் பிரிவு செயலாளராக ஏ.எல்.குணசேகரன், மருத்துவ அணி செயலாளராக டாக்டர் எஸ்.பாலசுப்பிரமணியம், இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை மாவட்ட தலைவராக ஏ.டி.ஆனந்த், மாவட்ட செயலாளராக கே.எஸ்.கே.பாலமுருகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் புறநகர் கிழக்கு மாவட்டம் சோளிங்கர் கிழக்கு ஒன்றிய செயலாளராக சி.அசோகன், சோளிங்கர் மேற்கு ஒன்றியசெயலாளராக எஸ்.சின்னதுரை, ஆற்காடு நகர செயலாளராக ஜிம்.எம்.சங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி புறநகர் தெற்கு மாவட்டம் கடையம் ஒன்றிய செயலாளராக ஆர்.டி.அருவேல்ராஜ், ஆலங்குளம் ஒன்றிய செயலாளராக என்.எச்.எம்.பாண்டியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மகளிர் அணி செயலாளர் உசிலைராணி, புதுக்கோட்டை நகரைச் சேர்ந்த சோனா ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.