விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையின் அறிவியல் களஞ்சியம் நூல் வெளியிடப்பட்டது
கல்வி மற்றும் சமுதாய ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை மற்றும் வளரும் அறிவியல் நூல் ஆசிரியர் சிவக்குமார் ஆகியோர் எழுதிய 'வளரும் அறிவியல் களஞ்சியம்' நூல் வெளியீட்டு விழாவும், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் விழாவும் நேற்று சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவுக்கு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமை தாங்கினார். நூலை டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நட்ராஜ் வெளியிட்டார்.
அப்போது விழாவில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறியதாவது,
உயர் கல்வி தான் என்னை இந்த அளவிற்கு உயர்த்தியது. எனவே அடுத்த தலைமுறையினருக்கு சிறந்த கல்வி கிடைக்க வாய்ப்பளித்தால், சந்திராயனை விட பெரிய சாதனைகளை வருங்கால இளைஞர்கள் சாதிக்க முடியும். பெருமைப்பட கூடிய காரியங்களை நாம் செய்தால் அதை பெருமையாக சொல்வதில் தவறு ஏதும் இல்லை. தாய்மொழி வழி கல்வி தான் சிறந்தது என்றார்.