For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எத்தனை சோதனைகள் வந்தாலும் கூடங்குளம் போராட்டம் தொடரும்: உதயகுமார்

Google Oneindia Tamil News

Udhayakumar
நெல்லை: எத்தனை சோதனைகள் வந்தாலும் கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டத்தை கைவிட போவதில்லை என்று உதயகுமார் தெரிவி்த்துள்ளார்.

கூடங்குளம் அணுமின் நிலைய முற்றுகை போராட்டம் நேற்று மாலை 4 மணிக்கு முடிந்தது. அதன்பிறகு லூர்து மாதா ஆலய பந்தலுக்கு உதயகுமார் வந்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

முற்றுகை போராட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. 3 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். தமிழகத்தில் உள்ள 13 கடலோர மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டால் என்னவாகும் என்பது மத்திய, மாநில அரசுகளுக்கு தெரியும். மக்களின் உணர்வுகளை மத்திய, மாநில அரசுகள் மதிக்க வேண்டும்.

மக்களின் முடிவுகளுக்கு தான் அரசு அடி பணிய வேண்டும். எத்தனை சோதனைகள், அடக்குமுறைகள் வந்தாலும் போராட்டத்தை கைவிட போவதில்லை. வரலாற்றில் திருப்பு முனையாக கூடங்குளம் போராட்டம் அமையும்.

வரும் 11ம் தேதி தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரியை சேர்ந்த சமுதாய தலைவர்களுடன் இடிந்தகரையில் காலை 10 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசித்து அறிவிக்கப்படும் என்றார்.

English summary
Kudankulam protest will continue what ever problems and temptation comes says Kudankulam protest leader Udhayakumar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X