சூப்பர் மார்க்கெட்டில் பீர் பாட்டில் திருடிய கன்னியாஸ்திரி!
நியூயார்க்கில் உள்ள ஒரு கடைக்கு பொருட்களை வாங்க வந்த கன்னியாஸ்திரி ஒருவர் குளிர்பானங்கள் இருக்கும் பிரிவுக்கு சென்று ரெப்ரிஜிரேட்டரை திறந்து ஒரு பீர் டின்னை திருடி தனது பையில் மறைத்து வைத்து கொண்டார்.
பின்னர் அங்கிருந்து நகர்ந்து சென்று மற்றொரு ரெப்ரிஜிரேட்டரை திறந்து தண்ணீர் பாட்டில் ஒன்றை கையில் எடுத்துக்கொண்டு அதற்கு மட்டும் அவர் பணம் கொடுத்து விட்டு ஒன்றுமே நடக்காதது போல வெளியே சென்று விட்டார் ஆனால் அவர் பீர் பாட்டில் எடுத்து ஒளித்து வைத்ததை கடைக்காரர்கள் கண்டுபிடிக்கவில்லை
பின்னர் கடையில் ஸ்டாக் சரிபார்த்தபோது பீர் டின் ஒன்று குறைந்து இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காட்சியை பார்த்தபோது கன்னியாஸ்திரி பீர் பாட்டிலை திருடியது தெரிய வந்தது.
ஆனாலும் அவர் யார் என்பதை கடைக்காரர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.கடைக்கு வந்தவர் உண்மையிலே அவர் கன்னியாஸ்திரிதானா? அல்லது கன்னியாஸ்திரி போல உடை அணிந்து திருடினாரா? என்பது தெரியவில்லை.
இந்த காட்சி கடந்த 6 ம் தேதி முதல் யுடியூப் இணைய தளத்தில் உலாவருகிறது. இதை ஒன்றரை லட்சம் பேர் பார்த்து தங்களின் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.