மகனுக்காக 'கருணாநிதி மகன் ஸ்டாலினிடம்' மல்லுக்கட்டிய தூத்துக்குடி பெரியசாமி
சென்னை: தமது மகனுக்காக திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலிடம் தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமி மல்லுக்கட்டிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
திமுக இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களை தேர்வு செய்வதற்காக மு.க.ஸ்டாலின் மாவட்ட வாரியாக விண்ணப்பித்த ஆயிரக்கணக்கானவர்களை நேரில் அழைத்து சென்னை, திருநெல்வேலி, , திருச்சி என பல இடங்களில் நேர்காணல் நடத்தினார். தற்போது சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பாசறை கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டு, புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் பட்டியலை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் திமுக இளைஞரணி உள்ள அன்பகத்திற்கு சென்று இளைஞரணி செயலாளரான மு.க. ஸ்டாலிடம், தூத்துக்குடி திமுக மாவட்டச் செயலாளர் பெரியசாமி தனது மகனுக்காக, இளைஞரணி மாட்ட அமைப்பாளர் பதவி கேட்டுள்ளார். இதை ஸ்டாலின் நிராகரித்திருக்கிறார். ஆனாலும் அசராத பெரியசாமி மாலையிலும் சென்று ஸ்டாலினிடம் மல்லுக்கட்டியிருக்கிறார். கடைசியாக கெஞ்சியும்கூட பார்த்தாராம்! எதுவும் நடக்கவில்லை. ஒரேடியாக ஸ்டாலின் மறுத்துவிட்டார்.
இதனால் முகத்தில் 'உப்பு'வெடிக்க தூத்துக்குடிக்கே திரும்பிவிட்டாராம் பெரியசாமி!