ஜப்பான்காரரிடம் கன்னித்தன்மையை 4 கோடிக்கு விற்ற பிரேசில் மாணவி!
பிரேசிலின் சான்டா கேத்தரீனாவைச் சேர்ந்தவர் கேத்தரீனா மிக்லியோரினி. 20 வயதேயான இவர் ஒரு மாணவி. இவர் தனது கன்னித்தன்மையை ஏலம் விட முடிவு செய்தார். ஆன்லைனில் இதற்கான அறிவிப்பையும் வெளியிட்டார். இதையடுத்து திமுதிமுவென பலரும் குவிந்து விட்டனர். இவர்களைப் பரிசீலித்த கடைசியாக நான்கு பேரை அவர் இறுதி செய்தார்.
இந்தியாவைச் சேர்ந்த ருத்ரா சாட்டர்ஜி, ஜப்பானைச் சேர்ந்த நட்சு, அமெரிக்காவைச் சேர்ந்த ஜேக் மில்லர் மற்றும் ஜேக் ரைட் ஆகியோரே அவர்கள். இவர்கள் நால்வருமே கடுமையாக மோதினர். இறுதியில் நட்சுவை தேர்ந்தெடுத்தார் கேத்தரீனா. இவருடன் விரைவில் டேட்டிங் வைக்கப் போகிறாராம். மொத்தம் ரூ. 4.19 கோடிக்கு கேத்தரீனாவின் கன்னித்தன்மையை ஏலத்தில் எடுத்துள்ளாராம் நட்சு.
இந்தப் பணத்தை வைத்து தனது சொந்த ஊரில் வறுமையில் வாடும் குடும்பங்களுக்காக இலவசமாக வீடு கட்டிக் கொடுக்கப் போகிறாராம் கேத்தரீனா. இந்த நல்ல காரியத்திற்காகவே தனது கன்னித்தன்மையை ஏலம் விடும் முடிவுக்கு அவர் வந்தாராம்.
மேலும் அவர் கூறுகையில், இதை வைத்து என்னை விபச்சாரம் செய்வதாக யாரும் கருதி விடக் கூடாது. ஒரே ஒரு முறைதான் எனது உடலை விற்பேன். இதுவும் ஒரு வர்த்தகம்தான். எனது இந்த டேட்டிங்கை ஒரு டாக்குமென்டரியாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிலர் எடுக்கவுள்ளனர். இருப்பினும் உடலுறவு வைத்துக் கொள்வது மட்டும் படமாக்கப்பட மாட்டாது. மற்றபடி நானும் நட்சுவும் பழகுவது படமாக்கப்படும்.
விரைவில் நானும் நட்சுவும் டேட்டிங் போகவுள்ளோம். ஆஸ்திரேலியா, அமெரிக்கா இடையிலான விமான பயணத்தின்போது இருவரும் உறவு கொள்வோம். அதற்கு முன்பு இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்போம், உறவுக்குப் பின்னரும் பேட்டி தருவோம்.
எங்களுடையே தனிமையின்போது செக்ஸ் பொம்மைகளுக்கு அனுமதி கிடையாது. ஆணுறை கண்டிப்பாக அணிந்து கொள்ள வேண்டும். நான் கன்னித்தன்மையுடன் உள்ளேன் என்பதை நிரூபிக்க எந்த சோதனைக்கும் உட்படத் தயார். அதேபோல நட்சுவுக்கு எய்ட்ஸ் உள்ளிட்ட நோய்கள் இருக்கிறதா என்பது பரிசோதிக்கப்படும் என்றார் கேத்தரீனா.