For Daily Alerts
Just In
பாகிஸ்தான் அதிபர் சர்தாரியிடம் சரப்ஜித் சிங் மீண்டும் கருணை மனு
இது தொடர்பாக சரப்ஜித் சிங்கின் வழக்கறிஞர் அவாஸ் ஷேக் கூறுகையி, இந்தியாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தானின் சிஸ்டி, மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கப்பட்டதை போன்று சரப்ஜித்சிங்கை விடுவிக்க வேண்டும் என்றார். பாகிஸ்தான் சிறையில் சரப்ஜித்சிங்கை அவாஸ் ஷேக் நேற்று இது தொடர்பாக நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
பாகிஸ்தானில் கடந்த 1990ம் ஆண்டு நிகழ்ந்த தொடர்பு குண்டுவெடிப்பில் தொடர்பிருப்பதாக கூறி சரப்ஜித் சிங்கிற்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் குடிபோதையில் வழி தவறி பாகி்ஸ்தான் எல்லைக்குள் புகுந்துவிட்டேன் என்பதுதான் சரப்ஜித் சிங்கின் வாதம். பொய்க்குற்றச்சாட்டின் கீழ் சரப்ஜித்சிங் மீது வழக்கு தொடரப்பட்டிருப்பது என்கின்றனர் அவரது உறவினர்கள்.
Comments
English summary
Indian death row prisoner Sarabjit Singh, who is accused of being involved in a string of bombings in Pakistani cities in 1990, will submit a fresh mercy petition to President Asif Ali Zardari.
Story first published: Monday, November 12, 2012, 12:22 [IST]