அமெரிக்க பொருளாதாரம்: இந்திரா நூயி உள்ளிட்ட 3 இந்தியர்களுடன் ஒபாமா ஆலோசனை
இப்போதைய பொருளாதார பிரச்சனைகள், நிதி நிர்வாகம், தொழிலாளர் நலன், மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இவர்களது ஆலோசனையை ஒபாமா கோரியுள்ளார்.
பெப்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான இந்திரா நூயி, அமெரிக்க வளர்ச்சி மையம் அமைப்பின் தலைவர் நீரா தண்டன், சமூக மாற்றத்துக்கான மையத்தின் தலைவர் தீபக் பார்கவா ஆகியோரை ஆலோதனைகளுக்காக ஒபாமா அழைத்துள்ளார்.
அதே போல ஹனிவெல் சாப்ட்வேர் நிறுவனத்தின் தலைவர் டேவிட் கோட், வால்மார்ட் அதிபர் மைக் டியூக், ஜெனரல் எலெக்ட்ரிக் மூத்த செயல் அதிகாரி ஜெப் இம்மெல்ட், டெள பங்குச் சந்தையின் மூத்த அதிகாரி ஆண்ட்ரூ லிவேரிஸ், புராக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனத்தின் ராபர்ட் மெக்டொனால்ட், போர்ட் கார் நிறுவனத்தின் ஆலன் முல்லே, ஐபிஎம் கம்ப்யூட்டர் நிறுவன அதிகாரி ஜின்னி ரோமெட்டி, செவ்ரான் பெட்ரோலிய நிறுவனத்தின் ஜான் வாட்சன், ஜெராக்ஸ் நிறுவனத்தின் உர்சுலா பர்ன்ஸ் ஆகியோரையும் ஆலோசனைகளுக்காக அழைத்துள்ளார் ஒபாமா.