For Daily Alerts
Just In
தமிழகத்துக்கு 4.8 டிஎம்சி தண்ணீர் திறந்து விட கர்நாடகத்துக்கு காவிரி கண்காணிப்புக் குழு உத்தரவு
டெல்லி: கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு 4.8 டிஎம்சி தண்ணீர் திறந்து விட காவிரி கண்காணிப்புக் குழு உத்தரவிட்டுள்ளது.
இன்று டெல்லியில் நடந்த காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டத்தின் முடிவில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நீரை நவம்பர் 16 முதல் 30ம் தேதி வரை திறந்து விட வேண்டும் என்று கர்நாடகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய நீர்வளத் துறை செயலாளருமான துருவ் விஜய் சிங் தலைமையில் டெல்லி ஷ்ரம் சக்தி பவனில் இந்தக் கூட்டம் நடந்தது.
இதில் குழுவின் உறுப்பினர்களான தமிழக தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, பொதுப்பணித் துறை செயலாளர், கர்நாடக தலைமைச் செயலாளர் எஸ்.வி. ரங்கநாத் உள்பட புதுச்சேரி, கேரள மாநில மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
Comments
English summary
The Cauvery Monitoring Committee (CMC) will meet today in Delhi to decide on the 52.5 tmcft water to be released toTamil Nadu by Karnataka