பாலஸ்தீனம் மீது 5வது நாளாக தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்
Subscribe to Oneindia Tamil

காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ச்சியாக வான்வழித்தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் ஹமாஸ் இயக்க மூத்த தளபதி ஜபாரி உயிரிழந்தார். ஹமாஸ் இயக்கத் தலைமையகம் மற்றும் ஹமாஸ் ஆதரவு தொலைக்காட்சி நிலையம் ஆகியவை நிர்மூலமாகின. இதில் 6 பத்திரிகையாளர்கள் படுகாயமடைந்தனர்.
காசா பகுதியிலிருந்தும் பல நூறு ராக்கெட்டுகள் இஸ்ரேலை நோக்கி வீசப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று 5-வது நாளாக அதிகாலை முதலே வான்வழித் தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல். இஸ்ரேலின் இந்த கொடுந்தாக்குதலுக்கு எதிராக பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ்லும் போராட்டம் நடைபெற்றது. பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலுக்கு எகிப்து உள்ளிட்ட பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications