For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடுத்த ஆண்டு ஓஹோன்னு இருக்கப் போகுது ஐடி துறை! - சொல்லுது நாஸ்காம்

By Shankar
Google Oneindia Tamil News

IT Growth
பெங்களூர்: அடுத்த ஆண்டு 2013-2014-ல் தகவல் தொழில்நுட்பத் துறை (ஐடி) மிக நல்ல நிலையில் இருக்கும் என நாஸ்காம் தெரிவித்துள்ளது.

இந்திய மென்பொருள் நிறுவன அமைப்புகளின் கூட்டமைப்பான நாஸ்காம், வரும் ஆண்டில் ஐடி வர்த்தகம் எப்படி இருக்கும் என கணித்துள்ளது.

கடந்த ஆண்டு ஐடி துறையின் வர்த்தகம் 100 பில்லியன் டாலராக இருந்தது. வரும் ஆண்டில் இந்த வளர்ச்சி நிச்சயம் இரட்டை இலக்க சதவீதத்தில் அமையும் என அந்த அமைப்பின் தலைவர் சோம் மித்தல் தெரிவித்துள்ளார்.

இனி வரும் நாட்களில் தகவல் தொழில் நுட்பத் துறையின் நோக்கம், வளர்ச்சி, வர்த்தகம் மற்றும் நிதியுதவி தொடர்பாக புதிய கொள்கைகளை வகுக்குமாறு நாஸ்காம் பிரதிநிதிகள் அரசுகளை வற்புறுத்துவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Nasscom chief Som Mittal says that the IT industry would do 'exceedingly well' in 2013-14.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X