For Daily Alerts
Just In
நாடாளுமன்றத்தில் தீ விபத்து: நல்லவேளை இன்று லீவு
டெல்லி: நாடாமன்ற கட்டிடத்தில் உள்ள 2 அறைகளில் இன்று திடீர் என்று தீவிபத்து ஏற்பட்டது.
குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 22ம் தேதி துவங்கி நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள அறைகள் எண் 7 மற்றும் 8ல் இருந்து புகை வந்துள்ளது. இதைப் பார்த்தவர்கள் உடனே இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் இரண்டு வாகனங்களில் வந்து போராடி தீயை அணைத்தனர். மின் கசிவினால் தான் தீ விபத்து ஏற்பட்டது என்று கூறப்படுகிறது.
இந்த விபத்தில் யாரும் காயம் அடைந்ததாக தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. குருநானக் பிறந்தநாளையொட்டி இன்று நாடாளுமன்றத்திற்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் லோக்சபா, ராஜ்யசபா உறுப்பினர்கள் விபத்தில் சிக்காமல் தப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English summary
Fire broke out in two rooms in Parliament on Wednesday, Nov 28. Smoke was seen outside room no 7 and 8. It seems that all Parliamentarians had a major escape as both Houses, Lok Sabha and Rajya Sabha, did not convene on Wednesday due to Guru Nanak Jayanti.
Story first published: Wednesday, November 28, 2012, 15:05 [IST]