கெஜ்ரிவாலின் 'ஆம் ஆத்மி' வெற்றி பெறுவது சந்தேகம் தான்: சந்தோஷ் ஹெக்டே
டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறுவது சந்தேகமே என்று கர்நாடக லோக்ஆயுக்தாவின் முன்னாள் நீதிபதியும், முன்னாள் அன்னா குழு உறுப்பினருமான சந்தோஷ் ஹெக்டே தெரிவித்துள்ளார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அன்னா குழுவில் இருந்தவரும், கர்நாடக லோக்ஆயுக்தா முன்னாள் நீதிபதியுமான சந்தோஷ் ஹெக்டே அரவிந்த் கெஜ்ரிவாலின் கட்சி குறித்து கூறுகையில்,
கொள்கை ரீதியாக கெஜ்ரிவால் கட்சி துவங்கியுள்ளது நல்ல விஷயம் என்றாலும் நிஜத்தில் அது வெற்றி பெறுமா? காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை நாடாளுமன்றத்திற்கு 546 உறுப்பினர்களை தேர்வு செய்ய எக்கச்சக்க பணம் தேவை. கட்சி வேலை ஒன்றும் சுலபம் அன்று. பிரதமரை லோக்பால் மசோதா வரம்பிற்குள் கொண்டு வருவதில் என்ன தவறு? பிற நாடுகளில் பிரதமர்களுக்கு எதிராக ஊழல் வழக்குகள் இல்லையா?
முன்னாள் அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லையா? அப்படி இருக்கையில் பிரதமர் என்றால் என்ன? நம் நாட்டில் இரண்டு முன்னாள் பிரதமர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தன. ஜனாதிபதி மற்றும் ஆளுநர்கள் ஆகியோருக்கு தான் சட்ட நடிவடிக்கைகளில் இருந்து விதிவிலக்கு உண்டு, பிரதமருக்கு அல்ல என்றார்.












Click it and Unblock the Notifications