கருணாநிதியை சந்தித்த பிறகு சட்டசபை வைர விழாவில் கலந்து கொண்ட பிரணாப்
சென்னை: தமிழக சட்டசபையின் வைர விழா இன்று கொண்டாடப்படுகிறது. அதில் கலந்து கொள்ள ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் இருந்து திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்துவி்ட்டு பேரவை மண்டபத்திற்கு கிளம்பினார்.
அவர் அங்கிருந்து சி.ஐ.டி. காலனியில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டுக்கு சென்றார். அங்கு அவருக்கு திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் சால்வை அணிவித்து வரவேற்றார். மேலும் டி.ஆர். பாலு, திமுக எம்.பி. கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் வரவேற்றனர். பிரணாப் கருணாநிதியை சந்தித்து பேசினார். அதன் பிறகு சட்டசபை வைரவிழாவுக்கு கிளம்பினார்.
மாலை 4 மணிக்கு துவங்கிய விழாவை பிரணாப் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். வைர விழாவை முன்னிட்டு தயாரிக்கப்பட்டுள்ள சிறப்பு மலரை ஜெயலலிதா வெளியிட ஆளுநரும், ஜனாதிபதியும் பெற்றுக் கொள்கின்றனர். அதன் பிறகு சட்டசபை உறுப்பினர்களுக்கான விடுதிக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரணாப்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய் இக்பால் வாழ்த்துரையும், ரோசைய்யா தலைமையுரையும், ஜெயலலிதாவும், பிரணாபும் சிறப்புரையும் ஆற்றுகிறார்கள். விழா இன்று மாலை 5.30 மணிக்கு நிறைவடைகிறது. அதன் பிறகு ஆளுநர், ஜனாதிபதி உள்ளிட்டோர் ஜெயலலிதா அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்து கொள்கின்றனர்.