For Quick Alerts
For Daily Alerts
Just In
ஹெலிகாப்டர் கோளாறு- உயிர் தப்பினார் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர்
சித்திரதுர்கா மாவட்டம், ஜகலூர் என்ற இடத்தில் நேற்று நடந்த அரசு விழாவில் கலந்து கொள்ள ஹெலிகாப்டரில் ஜெகதீஷ் ஷெட்டர் புறப்பட்டுச் சென்றார். ஆனால் செல்லும் வழியில் அவரது ஹெலிகாப்டரில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து தாவனகரே அருகில் குமாரபட்டணம் என்ற ஊரில் ஹெலிகாப்டரை விமானி அவசரமாக தரை இறக்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் ஜெகதீஷ் ஷெட்டரை பாதுகாப்பாக அழைத்துச் சென்று அருகில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் தங்க வைத்தனர். சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு அவர் விழா நடைபெறும் இடத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.
விமானி சாதுர்யமாக செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு ஜெகதீஷ் ஷெட்டர் உயிர்தப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments
English summary
A helicopter in which Karnataka Chief Minister Jagadish Shettar was travelling on Friday made an emergency landing at an airstrip in Haveri district following a technical snag.
Story first published: Saturday, December 1, 2012, 9:34 [IST]